சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்!
ADDED :3658 days ago
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் வஜ்ராங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி, திருவதிகை, ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை 6:00 மணிக்கு, சுப்ரபாரதம், 6:30 மணிக்கு, கோ பூஜை, விஸ்வரூபம், 7:00 மணிக்கு, தோமாலை சேவை நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 1:00 மணிக்கு, உச்சிகால பூஜை, பிற்பகல் 4:00 மணிக்கு, நடைதிறப்பு, மாலையில், சாயங்கால தோமலை சேவை, இரவு 9:00 மணிக்கு, ஏகாந்த சேவை நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.