கைலாசநாதர் கோவிலில் கால பைரவாஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :3604 days ago
ஆத்தூர்: கால பைரவாஷ்டமியை முன்னிட்டு, ஆத்தூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள, பிரித்தியங்கிரா தேவி மற்றும் சொர்ண பைரவருக்கு, சிறப்பு பூஜை, உலக நன்மை வேண்டி, சிறப்பு யாக வேள்வி பூஜையும் நேற்று நடந்தது. பிரித்தியங்கிரா தேவி, சொர்ண பைரவர் ஸ்வாமிகள், வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர். அதேபோல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, எட்டு பைரவர் சிலைகளுக்கு அபிஷேகம் நடந்தது. ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்பட சிவன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டு பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.