உத்தரகோசமங்கையில் சங்காபிஷேகம்
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி தாயார் சன்னதியில் கார்த்திகை மாத சோமவார நிறைவு நாளான நேற்று 108 சங்காபிஷேகம் நடந்தது. சிவலிங்க வடிவில் சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, அதில் மலர்கள், புனித நீர் வைக்கப்பட்டிருந்தது. சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னர் பூரண கும்ப மரியாதையுடன் புனித நீர் கோயில் பிரகாரத்தில் வலம் வரப்பெற்று சிவாச்சாரியார்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். ராஜ அலங்காரத்தில் மங்களநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
* கீழக்கரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சோம வாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பஜனை பாடினர். சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது. ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர் செய்திருந்தனர்.* திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. நேற்று மாலை 6 மணிக்கு சிவலிங்க வடிவில்ல் சங்குகள் வைத்து வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் அபிஷேகம், தீபாராதனை, சந்தணக்காப்பு அலங்காரம் நடந்தது.