உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரடி விநாயகருக்கு சந்தனக் காப்பு

தேரடி விநாயகருக்கு சந்தனக் காப்பு

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் தேரடி விநாயகருக்கு சந்தனக்காப்பு விழா நடந்தது.
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள தேரடி விநாயகருக்கு நேற்று முன்தினம் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இதனையடுத்து காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 7 மணிக்கு விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் சோடசோபோபச்சார தீபாராதனையும், உற்சவ விநாயகருக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு விநாயகருக்கு சந்தனகாப்பு நிறைவு அபிஷேகமும், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !