ராஜகோபால சுவாமி கோவிலில் மார்கழி கூடாரவல்லி உற்சவம்!
ADDED :3758 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ராஜகோபால சுவாமி கோவிலில், மார்கழி மாத கூடராவல்லி உற்சவம் நடந்தது. மார்கழி மாதத்தில், ஆண்டாள் சுவாமி ரங்கநாதரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நாளையொட்டி, கூடாராவல்லி உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் பெரியார் நகர், ராஜகோபால சுவாமி கோவிலில் நேற்று காலை பெருமாள், தாயார், பக்த ஆஞ்சநேயர், கருட பகவான், ஹயக்ரீவர் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 7:00 மணியளவில் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, திருப்பாவை படிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அதில், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் சுவாமிக்கு பூஜை செய்து, மாலை அணிந்து கொண்டனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.