திருமழிசை கோவிலில் நாளை கருடசேவை
ADDED :3557 days ago
திருமழிசை : திருமழிசை, ஜெகனாத பெருமாள் கோவிலில், தை மகம் திருஅவதார மகோற்சவத்தில், நாளை, கருடசேவை நடைபெற உள்ளது. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள, ஜெகனாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள, பக்திசார் எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, தையில் மகம் திருஅவதார மகோற்சவம், கடந்த, 7ம் தேதி, பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின், 15ம் தேதி மாலை, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து மறுநாள் ஆழ்வார் தங்க பல்லக்கில் எழுந்தருளினார். பின், நேற்று காலை, சூரிய பிரபையிலும்; மாலை, சந்திர பிரபையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மகோற்சவம், வரும் 28ம் தேதி விடையாத்தியுடன் நிறைவு பெறும்.