திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்!
ADDED :3748 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ தூரம் நடந்து கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு செல்வர். அதன்படி இந்த மாதம், தை பவுர்ணமி கிரிவலம் இன்று (சனிக்கிழமை) காலை, 8.17 மணிக்கு தொடங்கி, நாளை காலை, 8.07 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.