மகாலட்சுமி அம்மன் கோவில் விழாவில் பால்குடம் எடுத்த பக்தர்கள்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அடுத்துள்ள தேவராடிபாளையத்தில், மகாலட்சுமி அம்மன் கோவிலின் ஒன்பதாவது ஆண்டு விழாவில், நேற்று பக்தர்கள் பால் குடம் எடுத்தனர். பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிேஷகத்திற்கு பின் ஒவ்வொரு ஆண்டும், ஆண்டு விழா நடத்துவது வழக்கம். அதன்படி, நேற்றுமுன்தினம் ஒன்பதாவது ஆண்டு விழா துவங்கியது. அதில், ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பொதுமக்கள் மகாலட்சுமி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்து வழிபட்டனர். நேற்று, காலை, 6:00 மணிக்கு யாகசாலை மற்றும் வேள்வி பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, அம்மனுக்கு பாலாபிேஷகம் செய்தனர். பின், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. பிற்பகல், 1:00 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்தனர்.