சிவகாசியில் முருகன் கோயில் கும்பாபிஷேகம்
சிவகாசி: சிவகாசி முருகன் கோயில் கும்பாபிஷேகம் பிப்.,19ல் நடந்த நிலையில் அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமியைதரிசனம் செய்தனர்.
இவ்விழா பிப்., 17 ல் துவங்க தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. இதைதொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பிப்.,19 காலை 6 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, பிம்ப சுத்தி, நான்காம் காலயாக பூஜைகள் நடந்தன. கொடிமரம் காலை 9 மணிக்கு கடங்கள் புறப்படுதல், காலை 9.15 மணிக்கு விமானங்கள், கொடிமரத்திற்கு புனித நீர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10மணிக்கு சிவசுப்பிரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் பலசரக்கு வர்த்தக மகமை பண்டு நிர்வாகிகள் செய்திருந்தனர்.