பத்ர காளியம்மன் கோவில் திருவிழா
ADDED :3542 days ago
ஓமலூர்: கருப்பூர், பத்ர காளியம்மன் கோவில் மாசி திருவிழாவில், நேற்று இரவு தீ மிதி விழா நடந்தது. ஓமலூர் தாலுகா, கருப்பூரில், பத்ர காளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த பிப்., 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அம்மன் சத்தாபரண வீதி உலா நடந்தது. நேற்று அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தி, பொங்கல் வைத்தல், சக்தி கரகம், அக்னி கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். வெள்ளாளப்பட்டி, மூங்கில்பாடி, தேக்கம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.