நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்!
ADDED :3532 days ago
நாமக்கல்: ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்படும். நாமக்கல் மட்டுமின்றி, பல்வேறு மாவட்ட பக்தர்கள் அன்றைய தினம் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வர். நேற்று பங்குனி முதல் ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் தயிரினால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று ஆஞ்சநேயர் சுவாமியை தரிசனம் செய்தனர்.