வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா இன்று துவங்குகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வடமதுரை பெருமாள் சுவாமி திண்டுக்கல் நகர் பகுதிக்கு சென்று நுõற்றுக்கணக்கான திருக்கண்களில் எழுந்தருளுவார். நடப்பாண்டு திருவிழாவிற்காக இன்று காலை 10 மணியளவில் சுவாமி பல்லக்கில் புறப்பட்டு இரவு முள்ளிப்பாடியில் தங்குகிறார். நாளை (மார்ச் 23) காலை முள்ளிப்பாடி சந்தனவர்த்தினி ஆற்றில் இறங்கி ராமதேவ மகரிஷிக்கு வரமளிப்பார். அன்று மாலை துவங்கி மார்ச் 29 இரவு வரை திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் புஷ்ப, குதிரை, கருட, புஷ்ப பல்லக்கு என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மார்ச் 30ல் வடமதுரை கோயில் சன்னதிக்கு பெருமாள் திரும்புவார். ஏற்பாட்டினை கோயில் செயல்அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.