உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்!

ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்!

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல்விழா கொடியேற்றத்துடன்  துவங்கியது.  இதையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  தீபாராதனைகள் செய்யப்பட்டது.

மேள தாளத்துடன்  சாலியர் உறவின்முறை பெரியோர்கள், தலைவர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது. 12 நாட்கள் நடைபெறும் விழாவில்  தினமும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.  எட்டாம் நாள் விழாவாக பொங்கல் ,ஒன்பதாம் நாள்  அக்கனிசட்டி மற்றும் பூக்குழி இறங்குதல் விழா நடைபெறும். பக்தர்கள் விரதம் இருந்துநேர்த்தி கடன் செலுத்த, 51,101 அக்னி சட்டிகள் எடுத்து  அம்மனுக்கு செலுத்துவர். பத்தாம் நாள் இரவு 10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தினமும் கோயில் கலை அரங்கத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் பொ ருட்காட்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உறவின்முறை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !