வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் ÷ காவிலில் நேற்று முன்தினம் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்து. மாலை 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதே போல் பண்ருட்டி சோமநாதசுவாமி கோவில், திருத்துறையூர் சிஷ்ட குருநாத சுவாமி கோவில், புதுப்பேட்டை காசிவிஸ்வநாத சுவாமி, செம்மேடு காசிவிஸ்வநாத சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பெண்ணாடம்: பிரளயகாலேஸ்வரர் கோவில் முன் மண்டபத்தின் அருகிலுள்ள அதிகார நந்தி பகவானுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில் கொடிமரம் அருகிலுள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப் ரமணியர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை நந்தி பகவானுக்கு அபிஷேகம், அருகம்புல் மாலை சாற்றி தீபாராதனை நடந்தது.