ஸ்ரீசாய் ஜெயந்தி விழா பல்லக்கில் பவனி
ADDED :3508 days ago
வால்பாறை: வால்பாறை துவாரகாமாயி அறக்கட்டளை சார்பில், ஸ்ரீசாய்ஜெயந்தி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை நகராட்சி கமிஷனர் (பொ) ராஜகோபால் தலைமையில், முனுசாமி கொடியேற்றினார். நேற்று மாலை நடந்த நாட்டியாஞ்சலி, பார்வையாளர்களை கவர்ந்தது. இன்று மாலை ஸ்ரீஷீரடிசாய் பல்லக்கில் பவனி வந்து, அருள் பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை, துவாரகாமாயி அறக்கட்டளை நிறுவனர்கள் சாய் செல்வரத்தினம், பிரவீனா உட்பட பலர் மேற்கொண்டுள்ளனர்.