உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலுக்குள் வரம்பு மீறும் வியாபாரிகள்!

ராமேஸ்வரம் கோயிலுக்குள் வரம்பு மீறும் வியாபாரிகள்!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் வியாபாரிகள் சிலர் செருப்புகள் அணிந்துகொண்டு வியாபாரம் செய்வதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் சன்னதி தெரு, ரதவீதி வழியாக கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் இளைப்பாற வசதியின்றி தவிக்கின்றனர். இந்நிலையில், கோயில் அம்மன் சன்னதி முன்பு மூடி கிடந்த புதிய கருங்கல் மண்டபத்தை சில நாள்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இங்கு தரிசனம் செய்து திரும்பும் பக்தர்கள் சிறிதுநேரம் தங்கி இளைபாறி செல்கின்றனர். இவர்களை குறிவைத்து வியாபாரிகள் சிலர் செருப்புகள் அணிந்தவாறு அம்மன் சன்னதி மண்டபத்திற்குள் நுழைந்து கடல் சார்ந்த பொருள்களை விற்பனை செய்கின்றனர். புனித தலமான கோயிலுக்குள் ஆன்மீக மரபுகளை மீறி செருப்புகள் அணிந்து செல்லும் வியாபாரிகளை கோயில் நிர்வாகத்தினரும் கண்டுகொள்வதில்லை. இவை பக்தர்களை முகம் சுழிய வைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !