வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம்
ADDED :3651 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் 10 நாள் நடைபெறும் அப்பர் சுவாமி சதய உற்சவம் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. 29ம் தேதி தண்ணீர் பந்தலும் 30ம் தேதி கட்டமுது உற்சவமும் மே 1ம் தேதி அப்பர் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. தினமும் பாதிரிக்குப்பம் வெங்கடேசனின் ஆன்மிக சொற்பொழி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடனசபாபதி, சுந்தரமூர்த்தி செய்து வருகின்றனர்.