உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம்

வரசித்தி விநாயகர் கோவிலில் அப்பர் சுவாமி சதய உற்சவம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் 10 நாள் நடைபெறும் அப்பர் சுவாமி சதய உற்சவம் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடக்கிறது. 29ம் தேதி தண்ணீர் பந்தலும் 30ம் தேதி கட்டமுது உற்சவமும் மே 1ம் தேதி அப்பர் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. தினமும் பாதிரிக்குப்பம் வெங்கடேசனின் ஆன்மிக சொற்பொழி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தாக்கள் நடனசபாபதி, சுந்தரமூர்த்தி செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !