பொன்பத்தி கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :3450 days ago
செஞ்சி: பொன்பத்தி முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள பொன்பத்தி முனீஸ்வரன் கோவிலில் ஜீரணோத்தரண மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 24ம் தேதி காலை 10.30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி, லஷ்மி, சுதர்சன ஹோமமும், பகல் 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலியும், இரவு 7 மணிக்கு யாக சாலை பூஜையும், 9:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சமர்ப்பணம் நடந்தது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, விசேஷ ஹோமம், 6:00 மணிக்கு தம்பதி பூஜையும், 7:00 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடும், 7.30 மணிக்கு முனீஸ்வரன், காத்தவராயன், அம்மச்சார் அம்மன் சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.