செம்பொற்சோதிநாதர் கோவிலில் பெரியபுராண சொற்பொழிவு
ADDED :3451 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த சாமியார் மடம் செம்பொற்சோதிநாதர் கோவிலில், வைகாசி மாத சதய நட்சத்திர தினத்தையொட்டி, திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடந்தது. மூலவர் செம்பொற்சோதிநாதர், உற்சவர்கள் திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசக பாடல்களை கோவில் ஓதுவார்கள் ஓதினர். மாகேஸ்வர பூஜைக்குப்பின் பவானி சிவனடியார்கள், திருக்கூட்டத்தை சேர்ந்த பிரகாஷ் சிவனடிமையின் பெரியபுரான சொற்பொழிவு நடந்தது.