தணிகை அம்மன் கோவிலில் 16ம் தேதி ஆடி உற்சவம்
ADDED :3412 days ago
திருத்தணி: தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆடி மாத உற்சவம், இம்மாதம், 16ம் தேதி முதல் துவங்கி, அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி நகராட்சி, பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சியம்மன் கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, ஜாத்திரை திருவிழா மற்றும் ஒரு மாத உற்சவ விழா, வரும், 16ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தினமும், மூலவர் அம்மனுக்கு, காலை, 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இதுதவிர, ஆடி மாதத்தில் வரும் நான்கு வெள்ளிக் கிழமைகளில், மூலருக்கு சந்தானக் காப்பு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த மாதம், 16ம் தேதி, ஜாத்திரை திருவிழா மற்றும் அம்மன் திருமுக கரக ஊர்வலம் நடக்கிறது. அன்று காலையில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலையில், உற்சவர் அம்மன், பூகரகம் ஊர்வலமும் நடக்கிறது.