ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
ADDED :3526 days ago
பொள்ளாச்சி: ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ஆனி மாத வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. விழாவையொட்டி, ஒன்பது வகையான அபிேஷகம் மற்றும் ஒன்பது வகை மலர்கள் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வால்பாறை எம்.எல்.ஏ., கஸ்துாரி வாசு, பேரூராட்சித்தலைவர் சாந்தலிங்ககுமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.