தொரவி கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :3368 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி பெரிய நாயகி உடனுறை கைலாச நாதர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. வினாயகர், தட்சிணா மூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சிவகாமி உடனுறை நடராஜர் சிறப்பு அலங்காரம் செய்து, இரவு 7:30 மணிக்கு மகா தீப ஆராதனை நடந்தது. பூஜைகளை புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். தொரவி ஊராட்சி தலைவி நாகேஸ்வரி சங்கர், வழக்கறிஞர் சம்பத், ஏனாதி நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.