தெய்வம் நின்று கொல்லும் என்பதன் காரணம் என்ன?
ADDED :5340 days ago
இறைவனின் பரமகருணையே இதற்குக்காரணம். எப்படியும் ஒருவன் நல்வழிக்கு திரும்பவேண்டும் என்பது தான் இறைவனின் திருவுள்ளம். இரணியனைக் கூட, நரசிம்மப்பெருமான், இருகூறாக்குவதற்கு முன், துவேஷ உணர்வு உதட்டளவில் இருந்தால் விட்டு விடலாம். உள்ளத்து அளவில் இருந்தால் தான் கொல்ல வேண்டும் என்று எண்ணினாராம். தீர்ப்பு நியாயமானதாக இருக்கவேண்டும் என்பதற்காக நாம் திருந்துவதற்கு தரும் வாய்ப்பு தான் காலம். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பார்களே! அதுபோல, காலம் உள்ளபோதே நல்வழியை நாடி வரவேண்டும் என்பது தான் இறைவன் திருவுள்ளம். அதனால் தான், தெய்வம் நின்று கொல்கிறது.