நினைச்சது நடக்க சதுர்த்தியன்று சுத்துங்க!
ADDED :3365 days ago
பெற்றோரை வலம் வந்து வணங்கி மாங்கனியை வென்றவர் விநாயகர். இவர் தன்னைச் சுற்றி வந்து வழிபடுவோருக்கு தேகபலம், புத்திபலம் என எல்லா நன்மையும் வழங்குவார். நெற்றியில் குட்டிக் கொள்ளுதல், தோப்புக்கரணம் இடுதல், சிதறுகாய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல் என விநாயகருக்குரிய தனி வழிபாட்டு முறைகள் பல இருந்தாலும், அவருக்குரிய விசேஷ பிரார்த்தனை பிரதட்சிணம் என்னும் சுற்றி வந்து வழிபடுவதாகும். சாதாரணமாக மூன்று முறை வலம் வருவது வழக்கத்தில் இருந்தாலும், மனதில் நினைத்தது நிறைவேற சதுர்த்தி திதியன்று விநாயகரை 21,48, 108 முறை என சுற்றி வந்து வழிபடுவது சிறப்பாகும். இதை நம்ம ஊர் அரசமரத்தடி விநாயகருக்கு செய்தாலே போதும்.