உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ஷீரடி சாய்பாபாகோவில்களில் பாலாபிஷேகம்

திருத்தணி ஷீரடி சாய்பாபாகோவில்களில் பாலாபிஷேகம்

திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், நேற்று நடந்தன.திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, 8:00 மணிக்கு, மூலவர் சாய்பாபாவிற்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மதிய ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும் நடந்தது. இதில், திருத்தணி, கே.ஜி.கண்டிகை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள்
வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !