பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் நாளை மூல மந்த்ர ஹோமம்
ADDED :3331 days ago
திருவள்ளூர்:திருவள்ளூர் விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், நாளை, மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது.திருவள்ளூர், பெரியகுப்பம், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பிரம்மாண்டமான விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், மூல நட்சத்திரத்தன்று மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. இம்மாதத்திற்கான மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, நாளை காலை, 9:00 மணியளவில், மூல மந்திர ஹோமம் துவங்குகிறது. ஹோமம் நிறைவடைந்த பின், காலை, 11:00 மணிக்கு, மகா தீபாராதனை நடைபெறும். புரட்டாசி மாத சனிக்கிழமையில், மூல நட்சத்திரமும் இணைந்து வருவதால், ஆஞ்சநேயருக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.