உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரருக்கு சனி பிரதோஷ வழிபாடு

வீரட்டானேஸ்வரருக்கு சனி பிரதோஷ வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚  கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு மகா அபிேஷகம் நடந்தது.  தொடர்ந்து நந்திகேஸ்வர பெருமானுக்கு 108 பால்குட அபிேஷகம்‚ அலங்காரம்‚ மற்றும் மூலவர் வீரட்டானேஸ்வரர்‚  நந்திகேஸ்வரருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6:15 மணிக்கு அலங்கார மண்டபத்தில், பிரதோஷ நாயகர் சிறப்பு  அலங்காரத்துடன் எழுந்தருளி தீபாராதனை நடந்தது. சுவாமி புறப்பாடாகி சிவபுராணம்‚ நமச்சிவாய கோஷத்துடன் கோவிலை  வலம்வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !