காளியம்மன் கோவிலில் பூமிதி விழா கோலாகலம்
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, மகா குண்டம் பூமிதி திருவிழா நடந்தது. குமாரபாளையம், காளியம்மன் கோவில் மாசித்திருவிழாவில், நேற்று காலை, 6:00 மணிக்கு மகா குண்டம் பூமிதித்தல் வைபவம், 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. இன்று காலை, 8:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், 10:00 மணிக்கு மகா தேர்த்திருவிழாவும் நடக்க உள்ளன. இரவு, 7:00 மணிக்கு வண்டி வேடிக்கை நடைபெற உள்ளது. நாளை காலை, 10:00 மணிக்கு தேர் நிலையடைதல், இரவு, 7:00 மணிக்கு வாண வேடிக்கை, 9:00 மணிக்கு காளியம்மன் அலங்கார திருவீதி உலா நடக்கிறது. வரும், 4 காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, 5 மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் விழா நடைபெற உள்ளது. அதே நாளில் ஜல்லிக்கட்டுள் நடக்கிறது. ஏற்பாடுகளை திருவிழா ஆலோசனை குழுவினர் கவனித்து வருகின்றனர்.