திருவண்ணாமலையில் ராகவேந்திர சுவாமிகள் ஜெயந்தி விழா
ADDED :3156 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, ராகவேந்திரா சுவாமிகள் கோவிலில், நேற்று ஜெயந்தி விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு, கோ பூஜை, 6:30 மணிக்கு கணபதி ஹோமம், 9:00 மணிக்கு பஞ்சாமிருத மஹா அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு, ராகவேந்திரா சுவாமிகளின் படத்துடன், உற்சவ மூர்த்தி மாட வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.