பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு
சபரிமலை: பங்குனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. 19-ல் நடை அடைக்கப்பட்ட பின், உற்சவ பூஜைகளுக்காக, 30ல், மாலை மீண்டும் நடை திறக்கும்.பங்குனி மாத பூஜைகளுக்காக, இன்று மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றுவார். வேறு பூஜைகள் எதுவும் கிடையாது. இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.நாளை அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்த பின், வழக்கமான நெய்யபிஷேகம் துவங்கும். 19- வரை வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜைகளுடன், சகஸ்ரகலசம், களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும். எல்லா நாட்களிலும், இரவு, 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 19-ம் தேதி இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.அதன் பின், பங்குனி உத்திர திருவிழாவுக்காக, 30ம் தேதி மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கும்.