மயிலம் கோவிலில் பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது
ADDED :3117 days ago
மயிலம்: மயிலம் முருகர் கோவி லில், பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில், பங்குனி கிருத்திகை விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:45 மணிக்கு கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர பெரு விழா துவங்கியது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு விநாயகர் விழா, சூரிய விமானத்தில் உற்சவர் கிரிவலம் நடந்தது. வரும் ஏப். 8 ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தலும், மறுநாள் இரவு 12:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 10ம் தேதி முத்துபல்லக்கு உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.