மைக்கேல்புரம் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு
ADDED :3120 days ago
மூங்கில்துறைப்பட்டு: மைக்கேல்புரம் புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த மைக்கேல்புரத்தில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று காலை குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. அருட்தந்தை மகிமை தலைமையில் குருத்தோலையுடன் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் இயேசுவின் பாடலை பாடிக்கொண்டு சென்றனர்.