மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை
ADDED :3213 days ago
நாமக்கல்: ஆன்மிக இந்து சமய பேரவை சார்பில், மழை வேண்டி நாமக்கல்லில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நாமக்கல், அரங்கநாதர் கோவில் அடிவாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர்
கோவிலில் நடந்த நிகழ்வுக்கு வக்கீல் மனோகரன் தலைமை வகித்தார். இதனை முன்னிட்டு பக்திப்பாடல்கள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு
ஆராதனை மற்றும் அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நாமக்கல் ஆன்மிக இந்து சமய பேரவை கவுரவ தலைவர் ஏகாம்பரம் செய்திருந்தார். பக்தர்கள்
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.