சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை மானாமதுரையில் மே3ல் தொடக்கம்
ADDED :3126 days ago
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக கருதப்படும் ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் கர்நாடக இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு அவருக்கு அஞ்சலி
செலுத்தும் வகையில் நடைபெறும் ஆராதனை விழா வரும் மே 3ந்தேதி தொடங்கி 5ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு,வயலின்,மிருதங்கம், மாண்டலின் போன்ற இசைக்கச்சேரிகளை நடத்த உள்ளனர். 3ந்தேதி பாபநாசம் ருக்மணிரமணி,குன்னக்குடி மீனாட்சி சுந்தரம்
ஆகியோருக்கு பாராட்டு விழா தொழிலதிபர் படிக்காசு தலைமையில் நடைபெற உள்ளது. 5ந்தேதி காலை குரு அஞ்சலி,கோஷ்டி கானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற
உள்ளன. ஏற்பாடுகளை ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.