பாதூர் கோவிலில் நிகும்பலா யாகம்
ADDED :3122 days ago
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் சித்திரை மாத அமாவாசை உற்சவம் நடந்தது.உளுந்தூர்பேட்டை தாலுகா, பாதூர் ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி கோவிலில் சித்திரை மாதஅமாவாசையையொட்டி,நிகும்பலாயாகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு, சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து யாக குண்டத்தில் பழ வகைகள், நெய் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் வேண்டுதல் எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சேர்ப்பித்தனர். பின்னர் யாக குண்டத்தில் புடவைகள், தாலி, வளையல்களை
சேர்ப்பித்தனர். தொடர்ந்து, ஸ்ரீஅகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.