முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3118 days ago
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் முத்துமாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு மதியம் 2:00 மணிக்கு முத்துமாரியம்மன் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பெண்கள் பூஜை செய்தனர்.