உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவ்வையாருக்கு கூழ்வார்த்தல் விழா கோலாகலம்

அவ்வையாருக்கு கூழ்வார்த்தல் விழா கோலாகலம்

உத்திரமேரூர்: ஆலஞ்சேரியில், அவ்வையார் கோவில் கூழ்வார்த்தல் திருவிழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஆலஞ்­சேரி உத்திரமேரூர் அடுத்துள்ளது, ஆலஞ்சேரி கிராமம். சிவன் புகழ் பாடி சென்ற அவ்வையார், தாகம் எடுத்து, தவித்த போது, அவருக்கு கூழ்கொடுத்து, அப்பகுதிவாசிகள் உபதேசித்து உள்ளனர். தன் பசி போக்கிய அவர்களை வாழ்த்தி, அங்கிருந்த ஆலமரத்தடியில் அமர்ந்து, அவ்வையார் பாடல் பாடியதாகவும், இதனால், அந்த ஊருக்கு ஆலஞ்சேரி என பெயர் பெற்றதாகவும், கிராமவாசிகள் கூறுகின்றனர். மேலும், பல ஆண்டுகளுக்கு முன், அவ்வையாருக்கு கோவில் கட்டி, ஆண்டுதோறும் சித்திரை மாதம் கூழ்வார்த்தல் விழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி இந்த ஆண்டு, கடந்த , 26ல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தீபம் ஏற்றி வழிபாடு சனிக்கிழமை காலை, ஆலஞ்சேரியில் உள்ள மாரியம்மன், கெங்கையம்மன், துர்கையம்மன் உள்ளிட்ட, 13 கோவில்களுக்கு அபிஷேகம் நடந்தது. நேற்று மலரால் அலங்கரிக்கப்பட்டு அவ்வையார் அப்பகுதி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தார். ஒவ்வொரு குடும்பத்தினரும், தீபம் ஏற்றி வழிபட்டனர். மாலை , 3:00 மணிக்கு அவ்வையார் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நடந்தது. ஆலஞ்சேரி மற்றும் அப்பகுதியை சுற்றியுள்ள நுாற்றுக்கணக்கானோர், இந்த விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !