மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :3094 days ago
மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டில் இடம்பெற்ற பழம் பெரும் கோயில் கூடலழகர் பெருமாள் கோயிலாகும். கோயிலின் வைகாசி விழாவை முன்னிட்டு இன்று(மே.31ல்) காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து , சுவாமி, நாச்சியாருடன் எழுந்தருள காலையில் கொடியேற்ற பூஜைகள் தொடங்கி, கொடியோற்றப்பட்டது. தினமும் காலை, இரவில் சுவாமி, நாச்சியாருடன் சிறப்பு வாகனத்தில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூகசுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.