உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரமங்கலம் சனீஸ்வர பகவானுக்கு கும்பாபிஷேக விழா

சூரமங்கலம் சனீஸ்வர பகவானுக்கு கும்பாபிஷேக விழா

சூரமங்கலம்: சேலம், ஐந்து ரோடு அருகே அமைந்துள்ள, சனீஸ்வர பகவானுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. சேலம், ஐந்து ரோடு, ரெட்டியூரில் சூட்சும மகாசக்தியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள நவக்கிரகத்தின் முன்பாக, மேற்கு திசை நோக்கி சனிபகவான்
தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று காலை, 6:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் சனீஸ்வர சுவாமி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் வேதஆகம முறைப்படி நடந்தது. ஏராளமான
பக்தர்கள், சனீஸ்வர பகவானை வழிபட்டு சென்றனர்.

கும்பாபிஷேகத்திற்காக திருநள்ளாறில் இருந்து தீர்த்தம், யந்திரம், விக்ரகத்தை அங்குள்ள சிவாச்சாரியார்கள் கொண்டு வந்தனர். விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !