பழநி கோயில்களில் அன்னாபிஷேகவிழா நிறைவு
பழநி: உலகநலன் வேண்டி பழநி மலைக்கோயிலில் துவங்கி, திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் ஆகிய கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.கடந்த ஜூலை 7ல் பழநி மலைக்கோயில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. உச்சிக்காலத்தில் முருகருக்கு 108 சங்கு புனிநீர் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சித்தநாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேலு, அசோக், செந்தில்குமார், கார்த்திக் ஏற்பாடுகளை செய்தனர். இதேப்போல ஜூலை 8ல் திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடந்தது. ஜூலை 9ல் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, செந்தில்குமார் செய்தனர். இன்று (ஜூலை10ல்) கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. கந்தவிலாஸ் விபூதிஸ்டோர் செல்வகுமார், நவீன்விஷ்னு ஏற்பாடுகளை செய்தனர்.