உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை: திருத்தணி கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி அமாவாசை: திருத்தணி கோவில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி;ஆடி மாத அமாவாசை யொட்டி, அம்மன் கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, ஆடி மாத அமாவாசையையொட்டி, மூலவருக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், உச்சி கால பூஜையும், மாலை மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இதே போல், திருத்தணி நகரில் உள்ள, படவேட்டம்மன் கோவில், தணிகை மீனாட்சி அம்மன் கோவில், தணிகாசலம்மன் கோவில், வன துர்க்கை அம்மன், காந்தி நகர் துர்க்கையம்மன் கோவில் மற்றும் பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் உட்பட நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில், ஆடி மாதத்தையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. சில பெண்கள் கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்தும், கூழ் ஊற்றியும் அம்மனுக்கு பூஜைகள் நடத்தி வழிபட்டனர். மேலும், அம்மன் கோவில்களில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் அம்மனுக்கு ஊஞ்சல் சேவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !