உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ஆடி அமாவாசை நிகுலம்பலா யாகம்

பாதூர் பிரத்தியங்கராதேவி கோவிலில் ஆடி அமாவாசை நிகுலம்பலா யாகம்

உளுந்துார்பேட்டை: பாதுார் அகத்தீஸ்வரர் பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையொட்டி நிகுலம்பலா யாகம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையொட்டி நிகுலம்பலா யாகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, யாக குண்டத்தில் பழவகைகள், நெய் ஊற்றப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் செல்லம்மாள்அருணாச்சல குருக்கள் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் யாக குண்டத்தில் புடவைகளும், தாலி, வளையல்களும், பழ வகைகள், பால், தயிர், நெய் கொட்டப்பட்டு தீபாரதனை நடந்தது. பிரத்தியங்கராதேவி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகுலம்பலா யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !