முத்து மாரியம்மன் கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2985 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்து மாரியம்மன் கோயில் ஆடி விழா ஆக.1 ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. கடைசி நாளான நேற்று முளைப்பாரிகளை கோயிலில் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். அதைத் தொடர்ந்து நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் இருந்து முளைப்பாரிகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அரசூரணியில் கரைக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற்றன.