பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்காபிஷேக விழா
ADDED :5229 days ago
உடுமலை : உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், இரண்டாம் சோமவார 108 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 9.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச பூஜை, சங்கு பூஜை, ஹோமம், காலை 10.30 மணிக்கு அபிஷேக பூஜைகள், காலை 11.00 மணிக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.