உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் முருகர் கோவிலில் சஷ்டி வழிபாடு; அன்னதானம்

மயிலம் முருகர் கோவிலில் சஷ்டி வழிபாடு; அன்னதானம்

மயிலம்: மயிலம் முருகர் கோவிலில், சஷ்டி வழிபாடு நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நடந்த வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !