திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் திருவாசக பெருவிழா
ADDED :2930 days ago
மேலுார்: மேலுார் அருகே திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயிலில் சீரடியார் கூட்டம் என்ற அமைப்பின் சார்பில் திருவாசகத்தின் ஓதுதலும், உரைத்தலும் விழா நடந்தது. தக்கார் கருமுத்து. கண்ணன் தலைமை வகித்தார். இணை ஆணையர் நடராஜன் முன்னிலை வகித்தார். அமைப்பாளர் ஜோதி ராமலிங்கம், வழக்கறிஞர் மணிவாசகம், பேஷ்கார் திரவியகுமார் உட்பட பலர் பேசினர்.