உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாலை கோவிலில் உச்சிகால சிறப்பு பூஜை

சிறுவாலை கோவிலில் உச்சிகால சிறப்பு பூஜை

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜைகள் நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சூரப்பட்டு அருகே உள்ள சிறுவாலை கிராமத்தில் அமைந்துள்ள, பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு, உச்சிகால பூஜைகள் நடந்தது. முன்னதாக பாலேஸ்வரருக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வாழைப்பூ கலச பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நடந்த உச்சிகால பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், கோவில் அர்ச்சகர் கோபி அய்யர் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !