உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜைகள்

பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜைகள்

கண்டாச்சிபுரம் : சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜைகள் நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் உள்ள பாலேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தை முன்னிட்டு உச்சிகால பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவர் பாலேஸ்வரருக்கு, 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தன. தொடர்ந்து நடந்த உச்சிகால பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், கோவில் அர்ச்சகர் கோபி அய்யர் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !