பணப்பிரச்னை இனியில்லை
ADDED :2910 days ago
ஆணவத்தால் அலைந்த சூரபத்மன் என்ற அசூரனை வெற்றி கொண்டார் முருகன். இதை கொண்டாட விரும்பிய தேவர்களின் தலைவன் இந்திரன், தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்தார். சீதனமாக பொன்னும் பொருளும் பரிசளித்தார். அதில் தேவலோகத்திலுள்ள ஐராவதம் என்னும் வெள்ளை யானையும் இடம் பெற்றது. இதன் பின் இந்திரனின் செல்வச் செழிப்பு குறைய ஆரம்பித்தது. செல்வத்தின் அடையாளமான ஐராவதம், தன்னை பிரிந்ததே காரணம் என்பதை உணர்ந்து, மருமகனிடம் ஆலோசித்தார். அதன் பின் யானையை தேவலோகம் இருக்கும் கிழக்கு திசை நோக்கி பார்க்கச் செய்ய இந்திரனுக்கு செல்வம் பெருகியது. இதனடிப்படையில் திருத்தணியில், யானை வாகனம் கிழக்கு நோக்கி உள்ளது. இதை தரிசித்தால் பணப்பிரச்னை தீரும்.