உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலம்

சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலம்

விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் அனைவரும் சிவபூஜை செய்த தலங்கள் பல உள்ளன.  இதுபோல, சிவன் தன்னைத் தானே பூஜை செய்து வழிபட்ட தலமாக இம்மையில் நன்மை தருவார் கோயில் மதுரையில் உள்ளது. இங்கு மூலவர் சிவலிங்க வடிவில் இருக்கிறார். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதி சிலைகள் உள்ளன.   மதுரையில் சிவபெருமான்  ‘சுந்தர பாண்டியர்’ என்னும் பெயரில் மன்னராக இருக்கிறார்.  பாண்டிய அரசர்கள் ஆட்சி பீடத்தில் அமரும் போது சிவபூஜை செய்வது வழக்கம். மதுரை மன்னரான சிவன் பட்டாபிஷேகம் நடக்கும்  ஆவணி மூல நட்சத்திர நாளில், சிவன் நேரில் எழுந்தருளி பூஜை செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !